Sunday, June 16, 2024
Home » மாணவிக்கு தாலி கட்டிய தொழிலாளி

மாணவிக்கு தாலி கட்டிய தொழிலாளி

by Karthik Yash

ஆட்டையாம்பட்டி, ஜன.11: ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பைரோஜி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஜெகன்(22). பிளஸ்2 முடித்து விட்டு பி.காம் படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள தானாகுட்டிபாளையம் பகுதியில் தறி ஓட்டி வந்துள்ளார். தறி பட்டறை அருகே வசித்து வரும், கடந்த ஆண்டு பிளஸ்2 முடித்த இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த 8ம் தேதி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பெருந்துறையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், மகளை கண்டுபிடித்து தருமாறு, பெண்ணின் பெற்றோர் நேற்று முன்தினம் ஆட்டையாம்பட்டி போலீசில் புகாரளித்தனர். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் அம்சவல்லி, விசாரணை நடத்தினார். இதையடுத்து, ஜெகனின் தந்தை கண்ணன், இருவரையும் ஆட்டையாம்பட்டி போலீசில் ஆஜர்படுத்தினார். ஜெகன் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, மாணவியை சேலம் அரசு மகளிர் காப்பகத்தில் சேர்த்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi