திருப்பூர், செப்.1:திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் இளம் கலைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்துறை கலைத்திறன் ஊக்குவிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் பவளக்குன்றன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். இதில் இயல், இசை, நாடகம், கீ போர்டு இசைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.