திருப்பூர்,செப்.1: திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரகலா, பொருளாளர் மகேந்திர பூபதி மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:தமிழக முதல்அமைச்சர் அறிவித்துள்ள பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு அனைத்துத்துறை காலிப்பணியிடங்களில் பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து பதவி உயர்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு, கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.