Monday, June 3, 2024
Home » மாணவர்களை மயக்கி சீரழித்து கைதான ஆசிரியையின் லேப்டாப்பில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்: முகநூலில் ஏற்றி கட்டணம் வசூல்: கஸ்டடியில் எடுக்க மகளிர் போலீசார் முடிவு

மாணவர்களை மயக்கி சீரழித்து கைதான ஆசிரியையின் லேப்டாப்பில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்: முகநூலில் ஏற்றி கட்டணம் வசூல்: கஸ்டடியில் எடுக்க மகளிர் போலீசார் முடிவு

by kannappan

மதுரை: மதுரையில் மாணவர்களை மயக்கி உல்லாசமாக இருந்த ஆசிரியையின் லேப்டாப்பில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் உள்ளன. ஆசிரியையுடன், மாணவர்கள் உல்லாசமாக உள்ள ஆபாச வீடியோக்களை முகநூலில் ஏற்றி, அதை பார்க்க கட்டணம் வசூலித்துள்ளனர் என்பதும் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து அவரையும், அவரது கள்ளக்காதலனையும் காவலில் எடுத்து விசாரிக்க மகளிர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.மதுரை நகரில் பெண் ஒருவர், மாணவர்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ வலம் வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் செந்தில்குமார், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கரிமேடு இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். இதில் திருப்பரங்குன்றத்தில் உள்ள பள்ளி மாணவர் ஒருவரின் செல்போனுக்கு ஆபாச வீடியோ வந்ததை கண்டுபிடித்தனர். அவரை வரவழைத்து, அனுப்பியது யார் என விசாரித்தனர். தனது மாமா வீரமணி(39), அதை அனுப்பியதாக அவர் தெரிவித்தார்.திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் பாலாஜி தெருவில் வசித்து வந்த வீரமணியை பிடித்து, போலீசார் விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. வீரமணி செல்போனில் சிறுவர்கள், ஒரு பெண்ணுடன் கூட்டாக உல்லாசமாக இருக்கும் 10க்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகள் இருந்தன. மேலும் 100க்கும் மேற்பட்ட போட்டோக்களும் இருந்தன.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வீரமணி கட்டிட சென்ட்ரிங் தொழில் செய்து வருகிறார். கடந்த 2010ல் சென்னைக்கு ரயிலில் சென்றுள்ளார். உடன் பயணம் செய்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்தக் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்த அந்த பெண்ணின் கணவர், பிரிந்து சென்று விட்டார். அந்த பெண் (43) தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வருகிறார். அவருக்கு 19 வயதில் மகன் உள்ளார். மகனுடன் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரிடம் பள்ளி மாணவர்கள் சிலர் டியூசன் படித்து வருகின்றனர். வீரமணியும், ஆசிரியையும் இன்டர்நெட்டில் உள்ள ஆபாச வீடியோக்களை பார்த்து, அதே போல் உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு பெண்ணுடன் 2, 3 ஆண்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை பார்த்து, ஆசிரியை தானும் அதே போல் இருக்க வேண்டும் என்று வீரமணியிடம் கூறியுள்ளார். ஏற்கனவே தனது மகனுடன் தவறான உறவு உண்டு என்று கூறிய ஆசிரியை, மேலும் 2 பேர் தேவை என்று வீரமணியிடம் கூறியுள்ளார்.இதையடுத்து தன்னிடம் டியூசன் படித்து வந்த 18, 16 வயது இரு மாணவர்களுக்கு ஆபாச படங்களை காட்டி மயக்கி, அவர்களுடன் அரை நிர்வாண கோலத்தில், ஆசிரியை செல்பி எடுத்துள்ளார். இந்த செல்பியை காட்டி மிரட்டி, அவர்கள் இருவருடனும், தன் மகனுடன் சேர்ந்து உல்லாசமாக இருந்துள்ளார். இதை வீரமணி செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 2 மாணவர்களையும் மிரட்டி, ஆசிரியை பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இது குறித்து வெளியில் சொன்னால், இந்த வீடியோக்களை இணையதளத்தில் போட்டு விடுவோம் என்று மாணவர்களை வீரமணியும், ஆசிரியையும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.கடந்த 2021, ஜூன் மாதம் கொரோனா 2வது ஊரடங்கின் போது, அந்த வீடியோ பதிவுகளை வீரமணி தனது நண்பர்கள் சிலருக்கு தனது செல்போனிலிருந்து அனுப்பி வைத்துள்ளார். இந்த ஆபாச வீடியோ பலருக்கும் பரவியதால், இந்த விவகாரம் அம்பலமாகி விட்டது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து ஆசிரியை, வீரமணி இருவரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது போக்சோவில் 2 பிரிவுகள் உட்பட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.‘வாங்க பழகலாம்’என்று வசூல் மகளிர் போலீசார் கூறுகையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளாக இந்த பாலியல் விவகாரம் தொடர்ந்து நடந்திருக்கிறது. ஆசிரியையின் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் மாணவர்களுடன் உல்லாசமாக உள்ள 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள், படங்கள் உள்ளன. அவரது லேப்டாப்பில் உள்ள படங்கள், வீடியோ பதிவுகளை ஆதாரமாக கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். ஆசிரியை மேலும் சில மாணவர்களை சீரழித்துள்ளார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ‘வாங்க பழகலாம்’ என்ற பெயரில் முகநூலில் குரூப் ஆரம்பித்துள்ளனர். அதில் மாணவர்களுடன் ஆசிரியை உல்லாசமாக உள்ள வீடியோக்களை போட்டு லிங்க் கொடுத்துள்ளனர். வீரமணி அல்லது ஆசிரியையின் வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்தினால் மட்டுமே அந்த லிங்க் ஓபன் ஆகும். இதன் மூலம் ஆசிரியையின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் சேர்ந்துள்ளது. தோண்டத் தோண்ட ஏராளமான விவகாரங்கள் வெளியாவதால் ஆசிரியை மற்றும் அவரது கள்ளக்காதலன் வீரமணியை நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்’’ என்றனர்….

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi