பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.7: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் ‘சமூக நீதிக் காவலர் கலைஞர்’ என்னும் தலைப்பில், மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் மாணவிகள் பாவனா முதல் பரிசும், இனியகவி 2ம் பரிசும், மாணவன் அதிரூபன் 3ம் பரிசும் பெற்றனர்.
அவர்களை கல்லூரியின் முதல்வர் அன்பரசி பாராட்டி பரிசுத் தொகையை வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்த்துறைத்தலைவர் சித்திரைச்செல்வி, கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் சுஜிதா மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.