Wednesday, May 15, 2024
Home » மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பினாமி அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை: வருமான வரி அதிகாரிகளிடம் ஏராளமான ஆவணங்கள் சிக்கின

மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பினாமி அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை: வருமான வரி அதிகாரிகளிடம் ஏராளமான ஆவணங்கள் சிக்கின

by kannappan

கோவை: கோவையில்  மாஜி அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பினாமி நிறுவன அலுவலகங்களில் தொடர்ந்து வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை  புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் இன்ஜினியர்  சந்திரசேகர். இவர் அதிமுக மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு மிகவும்  நெருக்கமானவர். அவருக்கு பினாமியாகவும் உள்ளார். இவரது வடவள்ளி வீடு,  பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு, நண்பர்கள் வீடு என 6 இடங்களில்  கடந்த புதன்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 13 மணி  நேரம் வரை நீடித்த இந்த சோதனையின்போது சந்திரசேகர் வீட்டில் இருந்த  உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சந்திரசேகர் வீட்டில் இருந்து  ஏராளமான ஆவணங்களை வருமான வரி துறை அதிகாரிகள் கைப்பற்றினர். நேற்று முன்தினம் கோவை அவிநாசி ரோடு பீளமேட்டில் சந்திரபிரகாஷ் என்பவரின் கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனையை தொடங்கினர். சந்திரசேகரின் நண்பர்தான் இந்த சந்திரபிரகாஷ். அவர் மாஜி அமைச்சர் எஸ்பி  வேலுமணிக்கு இன்னொரு பினாமி ஆவார். இவரது நிறுவன அலுவலகத்தில் நேற்றும் சோதனை 3வது நாளாக தொடர்ந்தது. அப்போது கடந்த அதிமுக  ஆட்சி காலத்தில் ஒப்பந்த பணிகள் மூலம் பெறப்பட்ட வருமானம், பல்வேறு  நிறுவனங்கள் மூலமாக கிடைத்த வருமானம் மற்றும் வருமான வரித்துறைக்கு  செலுத்திய வரி விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் புலியகுளம் பெரியார் நகரில் உள்ள ஆலயம் அறக்கட்டளை அலுவலகத்தில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். நேற்றும் இந்த அலுவலகத்தில் விசாரணை தொடர்ந்தது. அறக்கட்டளைக்கு முறையான  கணக்கு இல்லாமல் பணம் வந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக  அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில் ஏராளமான ஆவணங்கள், வங்கி கணக்குகள் சிக்கின. அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சோதனை முடிவில் அனைத்து இடங்களிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்,  பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ரொக்கம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. கேசிபி நிறுவனத்தில் மட்டும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவது அதிமுகவினர் மற்றும் எஸ்பி வேலுமணியின் தீவிர ஆதரவாளர்கள் இடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

You may also like

Leave a Comment

3 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi