Wednesday, May 15, 2024
Home » மல்லசமுத்திரத்தில் ₹1.29 கோடிக்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரத்தில் ₹1.29 கோடிக்கு பருத்தி ஏலம்

by kannappan

மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற ஏலத்தில் ₹1.29 கோடிக்கு பருத்தி விற்பனையானது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்  சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 3549 மூட்டை பருத்தியை கொண்டு வந்து குவித்தனர். இதில், சுரபி ரகம் ₹9311 முதல் ₹10776 வரையிலும், பிடி ரகம் ₹9422 முதல் ₹11150 வரையிலும், கொட்டு பருத்தி ₹6299 முதல் ₹7665 வரையிலும் ஏலம் போனது.இதன்மூலம் ₹1 கோடியே 29 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. அடுத்த பருத்தி ஏலம் வரும் 3ம் தேதி(புதன்கிழமை) நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மாணிக்கம்பாளையம் மையத்தில், பருத்தி ஏலம் நடைறெ்றது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 470   மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். பிடி ரகம் குவிண்டால் ₹10199  முதல் ₹11202 வரை விலை போனது. சுரபி ரகம் ₹10499 முதல் ₹11352  வரை விற்பனையானது. இதன்மூலம் ₹17.21 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்….

You may also like

Leave a Comment

sixteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi