கோவை, ஜூன் 11: கோவை கோவில்பாளையம் அருகேயுள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (42). மர வியாபாரி. இவருக்கு மது போதை பழக்கம் இருந்து வந்தது. கருத்து வேறுபாட்டினால் இவர் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். விரக்தியில் இருந்த அப்துல் ரகுமான் கெரசின் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் இவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.