தாம்பரம்: கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், அசோக் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (49). கூலி தொழிலாளி. இவரது மனைவி செந்தில்குமாரி (39). இவர், சென்னை மெட்ரோ ரயிலில் ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்து வருகிறார். தம்பதியின் மகள் மோனிஷா (18). நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல குடித்துவிட்டு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர், போதை தலைக்கேறிய நிலையில், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, செந்தில்குமாரியை சராமரியாக குத்தினார். தடுக்க முயன்ற மகள் மோனிஷாவையும் சராமரியாக கத்தியால் குத்தியுள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு விஜயகுமாரை தேடி வருகின்றனர்….
மனைவி, மகளுக்கு கத்தி குத்து: தந்தைக்கு வலை
previous post