Sunday, May 19, 2024
Home » மனைவியை வெட்டிய கணவர் கைது

மனைவியை வெட்டிய கணவர் கைது

by Karthik Yash

நெல்லை, ஏப்.14: நெல்லை அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார். திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரம் காலனி, நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (43). இவரது மனைவி பிரேமா(40) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல கடந்த 12ம் தேதி இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் முத்துக்குமார், பிரேமாவை அவதூறாக பேசி கம்பால் தாக்கினார். எனினும் ஆத்திரம் தீராமல், அரிவாளாலும் வெட்டி கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயமடைந்த பிரேமா சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துக்குமாரை நேற்று கைது செய்தார்.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi