திருப்பூர், மார்ச் 21: திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகரில் உள்ள ஸ்ரீ மும்மூர்த்தி பெரியாண்டவர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம், யாகசாலை போன்றவை நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி மு.நாகராசன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலரும், சுகாதாரக்குழு தலைவருமான கவிதா, வார்டு செயலாளர்கள் நேதாஜி கண்ணன், கேபிள் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கருப்பையா, செல்வம், சௌந்தர், மனோகர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.