கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல் நிலையத்தில், சிறுவர் மற்றும் சிறுமியர் மனமகிழ் மன்றம் சார்பில், விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரதநாட்டியம், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பர்கூர் இன்ஸ்பெக்டர் சவிதா தலைமை வகித்தார். எஸ்ஐ குட்டியப்பன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் இதர போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் சவிதா பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் மனமகிழ் மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.