கள்ளிக்குடி, மார்ச் 14: கள்ளிக்குடி பகுதியில் வில்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகர் மாவட்டம், செங்குன்றபுரம் தபால் நிலையம் தெருவைச் சேர்ந்த ராஜாமணி மகன் கருப்பசாமி (31) டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அவரது வாகனத்தில் போலீசார் நடத்திய சோதனை யில் மது பாட்டில்களை பதுக்கியிருப்பது தெரியவந்தது. அவற்றை, டூவீலருடன் பறிமுதல் செய்த போலீசார், கருப்பசாமியை கைது செய்தனர்.