சென்னை: அனகாபுத்தூர் பிரதான சாலையில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் ஒரு அறையில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 140 பாடப்புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கடந்த 2ம் தேதி மர்ம நபர்கள் சிலர் திருடிச்சென்றனர். புகாரின்பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் அனகாபுத்தூர் லேபர்பள்ளி தெருவை சேர்ந்த தமிழ்வாணன்(26), அனகாபுத்தூர் மகாத்மா நகரை சேர்ந்த பிரகாஷ்(45) மற்றும் வினோத்குமார்(26) என்பது தெரியவந்தது. நேற்று அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், மதுபானம் வாங்க பணம் இல்லாததால் அனகாபுத்தூர் அரசு பள்ளியின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து பாட புத்தகங்களை திருடிச்சென்று, அவற்றை பழைய இரும்புக்கடை வியாபாரியான பொழிச்சலூர் விநாயகா நகரை சேர்ந்த கோட்டைச்சாமி(50) என்பவரிடம் ₹750க்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து வியாபாரி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்….