ஈரோடு, ஜூன் 14: பெருந்துறை அடுத்துள்ள சுள்ளிபாளையம், ஆ.பாலக்காட்டூரை சேர்ந்தவர் கதிரவன் (35). இவரது மனைவி மீனாட்சி. குடிபோதைக்கு அடிமையான கதிரவன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி மதுவில் எலிபேஸ்ட் கலந்து குடித்துவிட்டதாக கூறி மயக்கமடைந்தார். பின்னர் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் சேலம் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி கதிரவன் இறந்தார்.