ஊத்தங்கரை, ஏப்.14: ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி குன்னத்தூர் பகுதியில், நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்ற, அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (36), மணிகண்டன்(65) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.