போடி, ஜூன் 23;போடி அருகே உள்ள குரங்கணி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் டாப் ஸ்டேஷன் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அதை பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (63) என்பவர், அவரது பெட்டிக்கடையில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அதே பகுதியில் அனுமதியின்றி மதுவிற்ற வினோத்குமார் (43) என்பவரையும் ேபாலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.