திருமங்கலம், ஏப். 18: திருமங்கலம் மேற்கு திமுக ஒன்றியம் சார்பில் செக்கானூரணியில் பொதுமக்களுக்கான நீர்மோர் பந்தலை தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் திறந்து வைத்தார். கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் விதமாக, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. திருமங்கலம் மேற்கு திமுக ஒன்றியம் சார்பில் நேற்று செக்கானூரணியில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
மேற்கு ஒன்றிய செயலாளர் தனபாண்டியன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன், நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர், சர்பத் உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கணேசன், துணைசெயலாளர்கள் முத்துப்பாண்டி, முருகன், பாண்டியம்மாள், பிரதிநிதிகள் தனிக்கொடி, மதியழகன், மகேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் முத்துராமன், மதன்குமார், சுதாகரன், அமைப்பாளர் சுரேஷ், விமல். வெற்றி, சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.