மதுரை, ஏப். 23: மதுரை ரயில்வே போலீசாருக்கு கூரியர் மூலம் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதமானது, பைகாரா பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரின் பெயரில் வந்தது. அதனை போலீசார் பிரித்து படித்த போது அதில், பைகாரா பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக எழுதப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அதில் இருந்த முகவரியை தொடர்பு கொண்டு பேசி யபோது அதில் பேசியவர், நான் மதுரையில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பதாவும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் முன்விரோதத்தில் என்னுடைய பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அந்த கடிதத்தை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.