மதுரை: மதுரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் நேற்று ஒரேநாளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தம் 40 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மதுரை சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 19ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. …