ரிஷிவந்தியம், ஏப்.6: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரிஷிவந்தியம் உள்ளிட்ட பல பகுதிகளில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்படி ரிஷிவந்தியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகோபால் தலைமையில் போலீசார் அந்தந்த பகுதியில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த சீனுவாசன் மகன் செல்வம் என்பவர் கடையில் 180 எம்எல் கொண்ட 40 பிராந்தி பாட்டில்கள், 9 பீர் பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்வம் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து 49 பீர் மற்றும் பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.