போடி, ஜூன் 5:போடி நகர் எஸ்ஐ முத்துசாமி போடி ஜக்கம்மநாயக்கன்பட்டி கருப்பசாமி கோயில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போடி கீழத்தெரு சர்ச் ரோட்டை சேர்ந்த முனியாண்டி (41), அவரது தாய் செல்வம்(60) டூவீலரில்மதுபாட்டில்களை மூட்டையாக கட்டி ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனத்தை வழி மறித்து சோதனை செய்த நேரத்தில் முனியாண்டியும், செல்வமும் எஸ்.ஐயை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்துள்ளனர். உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்கள்அனுமதி இன்றி சட்ட விரோதமாக வைத்திருந்த 34 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.