மல்லசமுத்திரம், ஜன.18: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதிமுக சார்பில், மல்லசமுத்திரம் ஒன்றியம் கள்ளுக்கடை பஸ் நிறுத்தம், மல்லசமுத்திரம் பஸ் நிலையம், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக்கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, ெபாதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னதாக மல்லசமுத்திரம் பஸ் நிலையத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தினர். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மாவட்ட துணை செயலாளர் தேவராசன், மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் மாது, மாவட்ட பிரதிநிதி தங்கமணி, பேரூராட்சி அவைத்தலைவர் பழனிவேல், ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மதிமுக கொடியேற்று விழா
previous post