மண்டபம், மார்ச் 20: நாடாளுமன்ற தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால் மண்டபம் பகுதியில் பொது இடங்களில் சுவர்களில் எழுதப்பட்ட விளம்பரத்தையும், ஒட்டப்பட்ட போஸ்டர்களையும் பேரூராட்சி ஊழியர்கள் அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் பொது இடங்களில், அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் எழுதப்பட்டுள்ள கட்சி விளம்பரங்கள், கட்சி விளம்பரம் போஸ்டர்கள் மற்றும் பொது நல போஸ்டர்கள் உட்பட அனைத்து போஸ்டர்களும் அகற்றப்பட்டு சுவர்களில் எழுதப்பட்ட வாசகங்களை அழிக்கப்படும் பணியில் மண்டபம் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நேற்று மூன்றாவது நாட்களாக அப்பகுதியில் இந்த பணிகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.