கமுதி, மார்ச் 20: கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்பதும் இப்பகுதி மக்களின் தொழிலாகும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இரண்டு பேர் ஊருக்குள் புகுந்து ஆடுகளை திருடுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, ஒருவர் தப்பி ஓடி விட்டார். ஒருவர் மட்டுமே சிக்கினார். கமுதி போலீசார், பிடிபட்ட நபரான அம்மன்பட்டியை சேர்ந்த பிரித்திவிராஜ்(27) என்பவரிடம் விசாரணை செய்தனர். நேற்று தப்பியோடிய மற்றொரு நபரான மூலக்கரைப்பட்டி சேர்ந்த சரவணனை(23) பிடித்தனர். விவசாயி மாரிமுத்து அளித்த புகாரின் பேரில், இரண்டு பேரும் கைது செய்தனர்.