Saturday, May 11, 2024
Home » மக்களின் மனம் வென்ற கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவு பெரும் இழப்பு!: திரை பிரபலங்கள், தலைவர்கள் இரங்கல்..!!

மக்களின் மனம் வென்ற கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவு பெரும் இழப்பு!: திரை பிரபலங்கள், தலைவர்கள் இரங்கல்..!!

by kannappan

டெல்லி: கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது, அனைவரிடத்திலும் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா:கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் வயதிலேயே புனித் ராஜ்குமார் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்; அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல் என்று எடியூரப்பா குறிப்பிட்டிருக்கிறார். கனிமொழி எம்.பி.:மக்களின் மனம் வென்ற கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவு பெரும் இழப்பு என்று கனிமொழி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின்:கன்னட நடிகர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் சகாப்தமான ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமார், எனது குடும்பத்துடன் நல்லுறவு கொண்டவர். புனித் ராஜ்குமாரின் இழப்பு, தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.பிரதமர் நரேந்திர மோடி:கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமார் என்ற திறமையான நடிகரை விதி நம்மிடமிருந்து பிரித்துவிட்டது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். திரை பிரபலங்கள் இரங்கல்:புனித் ராஜ்குமார் மறைவுக்கு சிரஞ்சீவி, பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பிரித்வி ராஜ், ஹன்சிகா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நஸ்ரியா, சோனு சூட், ஆர்யா, விஷால், ராதிகா சரத்குமார், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர். தமன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.கே.சுரேஷ், நந்திதா ஸ்வேதா, பார்வதி திருவோத்து, கார்த்திக் ராஜு ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோல் மகேஷ்பாபு, நிவின் பாலி, ஸ்ராதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிசந்திரன், விஷ்ணு விஷால், மனோபாலா, நிக்கி கலராணியும் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து சரத்குமார், போனி கபூர், மஞ்சிமா மோகன், சந்தீப் கிஷான், விக்ரம் பிரபு, நாசர், மம்முட்டி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர். துல்கர் சல்மான், ரகுல் பிரீத் சிங், ஷ்ரேயா கோஷல், சாந்தினி, கவுதமி, வைபவ், குஷ்பு, பார்வதி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ராம் சரண், அருண் விஜய், ஈஷா ரெபா, அனுஷ்கா, ஜூனியர் என்.டி.ஆர்., சுனைனா, ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்களும் புனித் ராஜ்குமார் மறைவு குறித்து தங்களது இரங்கலை பதிவு செய்திருக்கின்றனர். …

You may also like

Leave a Comment

eighteen + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi