சென்னை: மாநில அளவில் மாணவிகள், மகளிர் அணிகளுக்கு இடையிலான வாலிபால் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. எம்ஓபி , ஜிகேஎம் அறக்கட்டளை, லேடி சிவசாமி பள்ளி இணைந்து இப்போட்டித் தொடரை நடத்துகின்றன. பள்ளி மாணவிகள், மகளிர் என 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும் (ஏப்.14-16). தமிழ்நாடு கைப்பந்தாட்டக் கழகம், சென்னை மாவட்ட கைப்பந்தாட்டக் கழகம் மேற்பார்வையில் போட்டிகள் நடக்கும். இரு பிரிவிலும் தலா 8 அணிகள் பங்கேற்க உள்ளன. மாணவிகள் பிரிவில் லேடி சிவசாமி , வேலம்மாள் மெட்ரிகுலேஷன், பாரதியார் மெட்ரிகுலேஷன், குண்டூர் சுப்பையா, டிஏவி, எஸ்டி ஹெலன், ஆவடி அரசு பெண்கள், வித்யோதயா பள்ளிகளும், மகளிர் பிரிவில் ஐசிஎப், தமிழ்நாடு காவல்துறை, ஜிகேஎம், பாரதியார் மேனிலைப் பள்ளி, எஸ்டிஏடி, சிவந்தி கிளப், எஸ்ஆர்எம்ஐஎஸ்டி, பிகேஆர் ஆகிய அணிகளும் களம் காண்கின்றன. மகளிர் பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுக் கோப்பை, பதக்கங்களுடன் முறையே ரூ.30,000, ரூ.20,000, ரூ.15,000, ரூ.10,000 வழங்கப்படும். மாணவிகளுக்கான பிரிவில் முதல் 4 இடங்களுக்கு முறையே ரூ.20,000, ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 பரிசளிக்கப்படும்.வெளியூர் அணிகளுக்கு தங்குமிடம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. …
மகளிர் வாலிபால் தொடர் சென்னையில் இன்று தொடக்கம்
previous post