வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா வாய்மேடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல் முன்னிலை வைத்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம், ஊராட்சி செயலர் அறிவழகன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தாணி கோட்டகம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி குமார் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி தனபாலன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆயக்காரன்புலம் 2ம் சேத்தியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.மருதூர் தெற்கு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மருதூர் வடக்கு ஊராட்சியில் தலைவர் சங்கீதா பன்னீர்செல்வம் (அதிமுக) தலைமையில் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கலைஞர்மகளிர் உரிமை தொகை வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வடமழை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.