பெரம்பூர்: வியாசர்பாடி 12வது தெரு சென்ட்ரல் அவென்யூ சாலையை சேர்ந்தவர் மருதுபாண்டி (58). இவரது மகன் மணிகண்டன் (32). மருதுபாண்டி சகோதரி அமிர்தம். இவர், இளையான்குடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருதுபாண்டியின் மகன் மணிகண்டனும், அமிர்தத்தின் மகள் ஷாலினியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். கடந்த 8ம் தேதி இளையான்குடிக்கு சென்ற மணிகண்டன் ஷாலினியை அைழத்து வந்து திருமணம் செய்து வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். கோபமடைந்த அமிர்தம், 5 பேரை அழைத்து வந்து கடந்த 9ம்தேதி இரவு மருதுபாண்டி வீட்டில் தகராறு செய்து அவரை வெட்டி உள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். புகாரின்படி, எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில், வியாசர்பாடி சர்மா நகர் பகுதியை சேர்ந்த கோபிநாத் (26), 19வது குறுக்கு தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அமிர்தம், ராஜா, சங்கர் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்….