சேலம், மார்ச் 26: சேலம் கிச்சிப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடு பணியின் ஒருபகுதியாக சேலம் மாநகர் முழுவதும் துணை ராணுவத்தினரும், போலீசாரும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். இந்தவகையில் நேற்று, சேலம் கிச்சிப்பாளையம் குப்பை மேடு பகுதியில் கொடி அணிவகுப்பை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் தொடங்கி வைத்தார். இதில், உதவி கமிஷனர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் மோகன்பாபுகண்ணா, பேபி, சம்பங்கி மற்றும் போலீசார், துணை ராணுவத்தினர் ஊர்வலமாக சென்றனர். தாதுபாய்குட்டை, எருமாபாளையம் மெயின்ரோடு வழியே நாராயணநகர் பகுதியில் இந்த கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக இத்தகைய கொடி அணிவகுப்பை நடத்தி வருகிறோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீசார் கொடி அணிவகுப்பு
previous post