கோவை ஏப்.26: கோவை தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் கோயில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது இரு தரப்பினர் பட்டாசு வெடித்த போது மோதல் ஏற்பட்டது. ஒரு தரப்பினர் பட்டாசு வெடிக்க கூடாது என எதிர்ப்பு காட்டினர். தகவல் அறிந்த பீளமேடு போலீசார் அங்கு சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர்.
அப்போது, போலீஸ் வாகனத்தை மடக்கி தகராறு செய்து மிரட்டல் விடுத்த தொட்டிபாளையம் பிரிவு அண்ணா நகரை சேர்ந்த தாவூத் இப்ராஹிம் (26), ஜான் சதின் (27), பிரதீப், ரஞ்சித் குமார், சக்திவேல் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் அர்ஜுன் மற்றும் அருண்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.