போர்ச்சுகல் நாட்டில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிகப்பெரிய தாவரவகை டைனோசரின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். டைனோசரின் பல்வேறு எலும்புகளை ஆய்வு செய்ததில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த வகை டைனோசர் வாழ்ந்திருக்கலாம் என்றும், 82 அடி நீளமும், மிக நீண்ட கழுத்தும் கொண்ட இந்த ராட்சத டைனோசர்கள், நிலத்தில் வாழ்ந்த விலங்குகளில் மிகப்பெரியதாக இருந்திருக்கக்கூடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.