போடி : போடி அருகே, மரத்தில் வாகனம் மோதிய விபத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான முட்டைகள் உடைந்து நாசமாகின.நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மினிடெ ம்போ வேனில் கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு போடி வழியாக நேற்று கேரள மாநிலம் மூணாறுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போதுபோடி சாலையில் ஆண்டிஓடை வளைவை கடந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு ஒதுக்கி வழிவிட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த மினிடெம்போ அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் வாகனத்தில் இருந்த 50 ஆயிரம் முட்டைகளில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகள் உடைந்து நாசமாகின. டிரைவர் காயமின்றி தப்பினார். விபத்தில் நாசமான உடைந்த முட்டைகளை அக்கம்பக்கத்தினர் பாத்திரங்களில் எடுத்து சென்றனர். இது குறித்து குரங்கணி போலீசார் விசாரித்து வருகின்றனர்….