Friday, May 17, 2024
Home » பொறையாரில் ரூ.38 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்

பொறையாரில் ரூ.38 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்

by Francis

 

தரங்கம்பாடி, ஜூலை 21: பொறையாரில் ரூ.38 லட்சம் மதிப்பில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் நபார்டு நிதி உதவியின் கீழ் ரூ.38 லட்சம் செலவில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமை வகித்தார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் வரவேற்றார்.

சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் இடுபொருட்களை வழங்கினார். விழாவில் வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் பழனிச்சாமி, உதவி செயற்பொறியாளர் தர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், மயிலாடுதுறை மாவட்டம் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஞானவேலன், நகர திமுக செயலாளர் முத்துராஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேளாண் உதவி அலுவலர் உதயசூரியன் நன்றி கூறினார்.

 

You may also like

Leave a Comment

nineteen − nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi