பொன்னை : காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த கீரைசாத்து பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 3 மாதங்களாக அரசு நெல் கொள்முதல் நிலையம் திடீரென செயல்படவில்லை என கூறி விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கொண்டிருந்தது.இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளின் கவனித்திற்கு கொண்டு சென்றும், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவில்லை என கூறி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், அரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பு விட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 29ம் தேதி செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தற்போது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்….