பொன்னமராவதி,ஜன.3: பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணம் தொடங்கினர். காரையூரில் உள்ள ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தன். இந்நிலையில் காரையூர் தர்ம சாஸ்தா அய்யப்ப பக்தர்கள் சார்பில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து அங்கு ஐயப்ப பக்தர்கள் ராஜா கோவிந்தன் குருசாமி தலைமையில் இருமுடி கட்டி சபரிமலை பயணம் மேற்கொண்டனர். முன்னதாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் காரையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச்சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.