பொன்னமராவதி, மார்ச் 31: பொன்னமராவதியில் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னமராவதி பேரூந்து நிலையத்தில் திருமயம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வில்சன் தலைமையில் 100 சதவீதம் வாக்களிக்க வழியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பொன்னமராவதி தாசில்தார் சாந்தா தேர்தல் துணை தாசில்தார் சேகர் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
பொன்னமராவதியில் 100 சதவீத வாக்களிக்க விழிப்புணர்வு
previous post