புதுடெல்லி: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி வருகிற 27ம் தேதி கலந்துரையாடுகிறார். பிரதமர் மோடி பரிக்ஷா பே சார்ச்சா என்ற பெயரில் ஆண்டுதோறும் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி வருகின்றார். இந்த ஆண்டுக்கான கலந்துரையாடல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், ‘‘2023ம் ஆண்டுக்கான பரிக்ஷா பே சர்ச்சா ஜனவரி 27ம் தேதி நடைபெறுகின்றது. பிரதமர் மோடி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவார். டெல்லியில் உள்ள டால்கடோரா உள் விளையாட்டரங்கில் நிகழ்ச்சி நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது….