கிருஷ்ணகிரி, ஜூலை 8: பர்கூர் அடுத்த சூரன்குட்டையில், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 5ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. முன்னதாக யாக சாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து புண்ணிய தீர்த்தங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. புனித நீரை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர்களின் சிலைகளுக்கு அபிஷேகம், பாலாபிஷேகம், குங்கும அபிஷேகம், சந்தன அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை, கோபுர தீப வழிபாடு நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அறங்காவலர் குழு தலைவர் சேகர், சீனிவாசன், கணேஷ், பூசாரி சாந்தகுமார், மணி, ராமமூர்த்தி, ஒன்றிய திமுக செயலாளர் ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி, கிருஷ்ணன், பழனிகுமார், மணி, மாரம்மாள், சுபேதர் பைரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.