மானூர், பிப். 7: மானூர் அருகே பட்டவர்த்தியைச் சேர்ந்தவர் காந்தி(55). டவுனில் காய்கறி கடை நடத்தி வந்தார். கடந்த 1ம்தேதி காந்தி ஊரில் இருந்து ரஸ்தாவுக்கு நடந்து வந்த போது அவ்வழியாக வந்த பைக், மோதியது. பலத்த காயமடைந்த காந்தி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ஐயப்பன்(37) கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிந்து நாஞ்சான்குளத்தைச் சேர்ந்த மாரியப்பன்(50) என்பவரிடம் விசாரித்து வருகிறார்.
பைக் மோதி வியாபாரி பலி
previous post