ஸ்பிக்நகர், ஜூன் 11: முத்தையாபுரம் எம் சவேரியார்புரம் கெபி தெருவைச் சேர்ந்த சூசைமணி மகன் சஞ்சய் (21). இவர் தூத்துக்குடியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் பைக்கில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சஞ்சய், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேட்ட வரம் கொடுக்கும் தூத்துக்குடி புனித அந்தோனியார்