ஆலந்தூர்: கிண்டி மடுவன்கரை ரங்கநாதன் தேருவை சேர்ந்தவர் விக்னேஷ் (35). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, பைக் திருடு போனது தெரிந்தது. பல இடங்களில் விசாரித்தும் பைக்கை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின்படி, கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜி (19) என்ற வாலிபர், பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்தனர்….