பேரையூர், ஏப். 5: மதுரை தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாண்டி முருகன் தலைமையில், பேரையூரில் நகர செயலாளர் வருசை முகம்மது, இளைஞரணி சாதிக் மொகைதீன், ஒன்றிய செயலாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பகுதிகளில் டூவீலர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வீதிதோறும், வீடுதோறும் வாக்கு சேகரிப்பு மற்றும் திமுக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த டூவீலர் பேரணி டி.கல்லுப்பட்டி சாலை, முக்குச்சாலை, பைபாஸ் சாலை, அரசமரம், வத்திராயிருப்பு சாலை, சுப்பிரமணியசாமி கோவில், தெற்குதெரு, முஸ்லீம்வீதி, அரண்மனை வீதி, பெருமாள் கோவில் வீதி, பட்டயத்துமுக்கு, மறவர் சாவடி, உசிலம்பட்டி சாலை, பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி செல்வன், ஒன்றிய பிரதிநிதி முருகன், திமுக நிர்வாகிகள் சேட், டெய்லர் கருப்பையா, வழக்கறிஞர் மதீனா சரவணன், குமார், அசோக், திவாகர், கண்ணன், ஜாகீர், முத்துக்குமார், முத்துராஜா, கனிமொழி பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.