கரூர், ஏப். 3: பேருந்துகளில் பயணம் செய்பவர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்போம் துண்டு பிரசுரம் விநியோகத்தை களத்தில் இறங்கி வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். கரூர் பாராளுமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 2024-யை முன்னிட்டு வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதையொட்டி நேற்று கரூர் சென்னை சில்க்ஸ் கடையில் துணிகள் வழங்கும் பையில் 100% வாக்களிப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அச்சடித்த துணிபைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் துணிகள் வாங்க வருவோருக்கு வழங்கினார். இதன் மூலம் நாள்தோறும் பல ஆயிரம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் கடவூர் பகுதியில் வருவாய்த்துறையினர் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு 100% வாக்களிப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கியும், வாடகை வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்ட வில்லைகளை ஒட்டி விழிப்பணர்வு ஏற்படுத்தினர். நாடாளுமன்றதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகளின் வேட்பாளர்களும், தலைவர்களும், தொண்டர்களும் தேர்தல் பிரசாரத்தை மதிய நேரத்தில் ஈடுபடுவதை சற்று தள்ளி வைத்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தை காலை 6 மணிக்கு துவங்கி பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கப் போவதாக சில தெரிவித்தனர்.