பேராவூரணி, நவ.26: நீட் விலக்கு, நம் இலக்கு என நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணியினர் பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) தொழுகைக்கு வந்த நூற்றுக்கணக்கானவர்களிடம் கையெழுத்து பெற்றனர். திமுக மருத்துவர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணி உள்ளிட்ட பிரிவுகள் சார்பில் நீட் விலக்கு, நம் இலக்கு என்ற கருத்தில் தீவிர கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் அரவிந்த் தலைமையில் பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) மதியம் தொழுகைக்கு வந்த நூற்றுக்கணக்கானவர்களிடம் நீட்டுக்கு எதிராக குடியரசு தலைவருக்கு அனுப்ப கையெழுத்து பெறப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல்மஜீத், திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஷாஜகான், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாணிக்கவாசகம் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.