பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே டூவீலர்கள் மீது டிராக்டர் மோதி 2 வாலிபர்கள் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா திருமலைக்குடியைச் குட்டையன் மகன் பாரதிராஜா (19).அதே ஊரைச் சேர்ந்த அழகர்சாமி மகன் மூர்த்தி (21).. இவர்கள் இருவரும் பாரதிராஜா அக்கா ஊரான வண்ணாரப்பட்டிடையில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருமலைகுடிக்கு சென்ற போது உசிலம்பட்டி அருகே எதிரே வந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா கோத்திராப்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஒட்டி வந்த டிராக்டர் மோதியது. இதில் பாரதிராஜா,மூர்த்தி ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.