Sunday, May 19, 2024
Home » பெரியார் நினைவுநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மரியாதை

பெரியார் நினைவுநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மரியாதை

by Ranjith

 

காஞ்சிபுரம், டிச. 25: தந்தை பெரியாரின் நினைவு நாளான நேற்று காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், எழிலரசன் எம்எல்ஏ, மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், எஸ்கேபி சீனிவாசன், அவைத் தலைவர் செங்குட்டுவன், ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார், வர்த்தகர் அணி துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பகுதிச் செயலாளர்கள் சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன், துணைச் செயலாளர் ஜெகநாதன், மாணவரணி ராம்பிரசாத், இலக்கிய அணி நாத்திகம் நாகராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், சாட்சி சண்முகசுந்தரம் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் திராவிடர் கழகம் சார்பில் முரளி, அசோகன், கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் வளையாபதி தலைமையில் நகரச் செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம், நிர்வாகிகள் அருள், வெங்கடேசன், குணசேகரன், சந்திரசேகர், ஏகாம்பரம், ராமானுஜம், நாமதேவன், உமாசங்கர், நகர இளைஞரணி சரவணன், காரை அருளானந்தம் உள்ளிட்டோர் பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேமுதிக சார்பில் மாநில நிர்வாகி ஏகாம்பரம் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகர மாவட்டச் செயலாளர் மதி ஆதவன், மாவட்ட நிர்வாகி பாசறை செல்வராஜ் ஆகியோர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாநில மாவட்ட துணைச் செயலாளர் திருமாதாசன், தொகுதிச் செயலாளர் டேவிட், தொகுதி துணைச் செயலாளர் ஸ்டான்லி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் மதி.ஆதவன், நகரச் செயலாளர் பாலாஜி, ஒன்றியச் செயலாளர் சத்யா, ஒன்றியக்குழு உறுப்பினர் ரேகா ஸ்டான்லி, நகர துணைச் செயலாளர் வினோத், ஒன்றிய துணைச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

seventeen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi