பெரியகுளம், ஏப். 27: பெரியகுளம் அருகே வடுகபட்டி திண்டுக்கல்- தேனி பைபாஸ் சாலை பகுதியில் நேற்று அரிய வகை ஆந்தை ஒன்று காயத்துடன் கீழே கிடந்துள்ளது. மேலும் அந்த ஆந்தை பறக்க முடியாமல் அங்குமிங்கும் தாவி சென்று கொண்டிருந்தது. இதை கண்ட வடுகபட்டியை சேர்ந்த சிலர் அந்த ஆந்தையை பிடித்து அதனை பாதுகாப்பாக வைத்திருந்தனர். பின்னர் இதுகுறித்து பெரியகுளம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் அந்த ஆந்தையை பத்திரமாக ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் ஆந்தையை சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு சென்றனர்.
பெரியகுளம் அருகே காயத்துடன் கிடந்த அரிய ஆந்தை மீட்பு: வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
previous post