பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்ட அளவிலான கோடைக்கால கலைப் பயி ற்சி முகாம் நிறைவுவிழா. பயிற்சிபெற்ற அனைவருக்கும் டிஎஸ்பி, தேர்தல் தாசில்தார் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர். தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் திருச்சி மண்டல த்தின்கீழ் செயல் படும் பெரம்பலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்றத்தில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே ஆகிய கலைகளில் 5வயது முதல் 16வயது வரையிலு ள்ள மாணவர்களுக்கு வா ரந் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் பயிற்சி அளிக்கப்ப ட்டு வருகிறது.இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்றத்தில் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறார்களுக்கு மே 5ம்தேதி முதல் 14ம் தேதி வரை கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. தினமும் காலை 9 மணிமுதல் நண்பகல் 1மணி வரை நடைபெற்ற பயிற்சி முகாமில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே ஆகிய கலைப்பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டன. இந்த பயிற்சிமுகாமின் நிறைவுவிழா நேற்று,(14ம் தேதி) நடை பெற்றது. விழாவில் பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி பழனிச்சாமி,பெரம்பலூர் மாவட்ட தேர்தல் தனிதாசில்தார் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கோடைகால சிறப்பு கலை பயிற்சியை பெற்ற மாண வ,மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர். விழாவில் சிலம்ப ஆசிரியர் முருகேசன், ஓவிய ஆசிரியர் ஹேமா மற்றும் மாணவ,மாணவியர், பெற்றோர் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக திட்ட அலுவலர் நடராஜன் வரவேற்றார். முடிவில் குரலிசை ஆசிரியர் லோகேஸ்வரன் நன்றி கூறினார்.