பெரம்பலூர்,நவ.28: பெரம்பலூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வரு கிற 30ஆம்தேதி நடைபெற உள்ளது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது :
ஜவுளித்துறையில் முன் னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங் குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.
இத்திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்படவேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப் பீட்டில் ( பொது உள் கட்டமைப்பு வசதிகள் பொது பயன்பாட்டிற்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ 2.50 கோடி இவற்றில் எது குறைவா னதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.
தற்போது தொழில் முனைவோரின் கோரிக் கையை தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. சிறிய அளவி லான ஜவுளிப் பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலை வாய்ப்பு பெருகும்.
மேலும், அதிகளவில் அந்நிய செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். எனவே சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகை களை அனைத்து மாவட்டங் களிலும் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேற்காண் பொருள் தொடர்பாக ஆலோசிக்கும் பொருட்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 30ஆம்தேதி பிற் பகல் 4.30 மணியளவில் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தொழில் முனைவோர்கள் அனைவ ரும் தவறாது கலந்து கொள்ளுமாறும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மண்டல துணை இயக்குநர், மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, எண். 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தாந்தோணி மலை கரூர்-639 005. தொலைபேசி எண் : 04324- 299 544, 9843212584 என்ற முகவரியினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் தெரி வித்துள்ளார்.